search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்"

    உடுமலையில் அறிஞர் அண்ணா 110-வது பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அறிஞர் அண்ணா 110-வது பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர்உடுமலை ராதாகிருஷ்ணன் பேசும்போது,

    அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாமானியரும் முதல்-அமைச்சர் ஆகும் வாய்ப்பு உள்ளது. பேரறிஞர் அண்ணாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதிமுக தான் என்றார்.

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பொதுகூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கே.எஸ்.பழனி சாமி முன்னிலையில் அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது,

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 24 ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித்திட்டம், ஒன்றிய பொது நிதி, முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள், தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டும் திட்டம்,

    கனிம மற்றும் சுரங்கப்பணிகள், 14 வது நிதிக்குழு மானிய பணிகள், நபார்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் பிற துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஊராட்சி வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் மற்றும் சாக்கடை வசதிகள் ஆகியவை முழுமையாக கிடைத்திட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, ருத்ராவதி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டு பகுதிகளில் பேரூராட்சிகளின் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    இந்நிகழ்வின் போது, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன், காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு, தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர்வி. எஸ்.காளிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர்ச. பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு ர் ரமேஷ் குமார், குண்டடம் வட்டார வளர்ச்சி மணிகண்டன், கலைச்செல்வி, ருத்ராவதி பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×